ஹவுசிங் போர்டு வீடுகளின் வாடகை உயர்வுக்கு உயர் நீதிமன்றம் தடை
சென்னை:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் உள்ள வீடுகளின் வாடகை உயர்த்தப்பட்டிருப்பதற்கு சென்னைஉயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் பொது ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளுக்கானவாடகையை தமிழக அரசின் வீட்டு வசதி வாரியம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை நந்தனம் சாலையில் உள்ள நியூ டவர் பிளாக் குடியிருப்போர் சங்கத்தின்தலைவர் அப்பையா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தான் தாக்கல் செய்த மனுவில், வீட்டு வசதி வாரியத்தின் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்என்றும், இது குறித்த அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அப்பையா கூறியிருந்தார்.
இவருடைய மனுவை விசாரித்த நீதிபதி ஆர். பாலசுப்பிரமணியம், வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ள வீட்டுவாடகை உயர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
-->












Click it and Unblock the Notifications