நிலப்பட்டா மாற்றுவதற்காக ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

Subscribe to Oneindia Tamil

விளாத்திகுளம்:

நிலப்பட்டாவை மாற்றுவதற்காக ரூ.1,000 லஞ்சம் வாங்கி கிராம நிர்வாக அதிகாரி ஒருவரை லஞ்ச ஒழிப்புபோலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் கருத்தையாபுரத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர், தன்பெற்றோர் பெயரில் இருந்த நஞ்சை நிலத்தை தன் அண்ணன் பெயரில் மாற்ற விரும்பினார்.

இதற்காக நிலப்பட்டாவை மாற்றும் பொருட்டு அவர் கடந்த குருவார்பட்டியில் கிராம நிர்வாக அதிகாரியாகப்பணிபுரிந்து வரும் சுந்தரகுமாரைச் சந்தித்தார்.

நிலப்பட்டாவை வேறு பெயரில் மாற்ற வேண்டும் என்றால் அதற்காக தனக்கு ரூ.600 கொடுக்க வேண்டும் என்றுசுந்தரகுமார் கேட்டார். வேணுகோபாலும் அப்பணத்தை உடனடியாகக் கொடுத்து விட்டார்.

ஆனாலும் பட்டாவை பெயர் மாற்றிக் கொடுக்காமல் சுந்தரகுமார் இழுத்தடித்துக் கொண்டிருந்தார். இது குறித்துஅவரிடம் வேணுகோபால் கேட்ட போது, மேலும் ரூ.400 வேண்டுமென்று அவர் கேட்டார்.

இதனால் கோபமடைந்த வேணுகோபால் நேராக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சென்று சுந்தரகுமார் குறித்துப் புகார்கூறினார்.

இதையடுத்து போலீசாரின் ஆலோசனைப் படி சுந்தரகுமாரின் வீட்டுக்குச் சென்ற வேணுகோபால் அவரிடம்ரூ.400 பணத்தைக் கொடுத்தார்.

சுந்தரகுமாரும் சந்தோஷமாக அந்தப் பணத்தை வாங்கிய போது, அருகில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார்பாய்ந்து சென்று அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

பின்னர் சுந்தரகுமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+