சாய்பாபா கோவிலில் குண்டு வைத்தவன் சுட்டுக் கொலை
ஹைதராபாத்:
ஆந்திராவில் சாய்பாபா கோவிலில் குண்டு வைத்த லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதி போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில்சுட்டுக் கொல்லப்பட்டான்.
சாய்பாபாவின் 77வது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் நடந்து வரும் நிலையில் நேற்று முன் தினம் ஹைதராபாத்தில்குஷ்நகர் பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலில் வெடிகுண்டு வெடித்தது. இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே இந்த குண்டுவைக்கப்பட்டிருந்தது.
இதில் பக்தை உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்துவிசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அப்போது இந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ. பின்னணி இருப்பதுதெரிந்தது.
இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் நேற்று ரெங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மத் ஆசம் என்பவனை கைதுசெய்தனர். வெடிகுண்டை வைத்தது நான் தான் என அவன் வாக்குமூலமும் அளித்தான்.
மேலும் வெடிகுண்டுகளை பார்வதிபுரம் என்ற இடத்தில் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறினான். இதையடுத்து அந்த குண்டுகளைப்பறிமுதல் செய்ய நேற்று நள்ளிரவு இவனை அழைத்துக் கொண்டு போலீசார் சென்றனர்.
அவன் குறிப்பிட்ட இடத்தில் புதர் இருந்தது. அங்கிருந்த குண்டுகளை வெளியே எடுக்கிறேன் என்று புதர் பகுதியில் கையைவிட்டமுகம்மத் ஆசம் அங்கிருந்து ரிவால்வர் துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட ஆரம்பித்தான்.
உடனே போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த இடத்திலேயே அவன் சுருண்டு விழுந்தான். இவன்லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன்.
இந் நிலையில் கர்னூலைச் சேர்ந்த ஒரு நபரும் இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குண்டு வெடித்த உடனே ஹைதராபாத்தின் முக்கிய விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கர்னூலைச் சேர்ந்த நபர்அவசரமாக விடுதியை காலி செய்துவிட்டுச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கர்னூல் சென்ற தனிப்படை அவனைக் கைது செய்தது. இவன் துணி வியாபாரி என்ற பெயரில் தீவிரவாதசெயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பாபாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்றே புட்டபர்த்தி வந்துவிட்டார். இன்றுபிரசாந்தி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு பாபா ஆசி வழங்கி கெளரவித்தார்.
-->
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications