For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராணுவ பஸ் கண்ணிவெடியில் சிக்கி சிதறியது: 9 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் ராணுவ பஸ்ஸை தீவிரவாதிகள் கண்ணி வெடி வைத்து தகர்த்தனர். இதில் 5 ராணுவ வீரர்களும் அவர்களதுகுடும்பங்களைச் சேர்ந்த 2 பெண்களும் 2 குழந்தைகளும் கொல்லப்பட்டனர். மேலும் 23 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

கடந்த இரு நாட்களாகவே மீண்டும் தீவிரவாதிகள் அட்டகாசம் காஷ்மீரில் தலைதூக்கியுள்ளது. நேற்று காலை ரிசர்வ்போலீசாரின் முகாமை தீவிரவாதிகளின் தற்கொலைப் படையினர் தாக்கியதில் 6 போலீசார் உயிரிழந்தனர். மேலும்9 வீரர்கள் பலத்த காயமடைந்தனர்.

இன்று காலை எல்லைப் பாதுகாப்புப் படையினரின் முகாமின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆனால், இதில் யாரும்உயிரிழக்கவில்லை.

இந் நிலையில் கண்ணி வெடி மூலம் ராணுவத்தின் பேருந்தை தகர்த்து தீவிரவாதிகள் அட்டகாசம் செய்துள்ளனர். ஜம்மூ- ஸ்ரீநகர்நெடுஞ்சாலையில் இன்று காலை 11.15 மணிக்கு இச் சம்பவம் நடந்தது. இந்த பஸ் ஸ்ரீநகரில் இருந்து ஜம்மூ சென்றுகொண்டிருந்தபோது தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கியது.

இதில் அந்த பஸ் தூக்கி எறியப்பட்டு தூள் தூளானது. அந்த இடத்திலேயே 5 வீரர்களும் 2 குழந்தைகளும் 2 பெண்களும் உடல்சிதறி உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் சாலை முழுவதும் சிதறிக் கிடந்த காட்சி மனதை உருக்கியது.

அதே போல பஸ்சில் இருந்த மற்ற 23 பேரும் குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மயங்கிக் கிடந்தனர். இவர்களைராணுவத்தினரும் போலீசாரும் மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக்கூறப்படுகிறது.

இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு ஜமாத்-உல்- முஜாகிதீன் மற்றும் ஹர்தக்-ஏ-ஜிகாத்-ஏ-இஸ்லாம் ஆகிய தீவிரவாத அமைப்புகள்பொறுப்பேற்றுள்ளன. தீவிரவாதம் அதன் கடைசி கட்டத்தில் இருப்பதாக முதல்வர் முப்தி முகம்மத் சயீத் கூறியதற்கு எதிராக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்த இரு கும்பல்களும் கூறியுள்ளன.

நேற்றைய ரிசர்வ் போலீஸ் முகாம் மீது லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதக் கும்பல் தாக்கியது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X