உலகின் பாப்புலரான பாடலாக ராக்கம்மா கைய தட்டு தேர்வு
லண்டன்:
பி.பி.சி. ரேடியோ நடத்திய போட்டியில் உலகின் மிகவும் பாப்புலரான பாடலாக தளபதி படத்தின் ராக்கம்மா கைய தட்டு பாடல்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மானின் 2 பாடல்கள் 5வது, 7வது இடத்தைப் பிடித்துள்ளன. 5வது இடத்தை வந்தே மாதரமும் 7வது இடத்தை சையசைய சைய்யா பாடலும் பிடித்துள்ளன.
மணிரத்னதம் இயக்கிய தளபதி படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான பாடல் அது. ரஜினியும் மம்மூட்டியும் இணைந்துநடித்த அந்தப் படம் 1991ம் ஆண்டு வெளிவந்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் ஸ்வர்ணலதாவும் அப் பாடலைப் பாடினர்.
பிபிசி ரேடியோ தனது 70வது ஆண்டு விழாவையொட்டி உலகின் சிறந்த பாடல்களை நேயர்களைக் கொண்டேபட்டியலிட்டுள்ளது. 116 நாடுகளைச் சேர்ந்த ரேடியோ நேயர்கள், அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் வாக்களித்துபாடல்களை தேர்வு செய்துள்ளனர்.
இதுபோல கிட்டத்தட்ட 1,000 பாடலகளை பிபிசி பட்டியலிட உள்ளது.
1979ம் ஆண்டில் வெளி வந்த கிளிப் ரிச்சர்ட்டின் வி டோன்ட் டாக் எனி என்ற பாடல் இரண்டாவது இடத்தையும் அமெரிக்கப்பாடகி செர் பாடிய பிலிவ் என்ற பாடல் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
ஜான் லின்னொன் எழுதிய இமாஜின் என்ற பாடல் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
5 வது இடத்தை ரஹ்மானின் இசையில் உருவான வந்தே மாதரம் பாடல் பிடித்துள்ளது.
பிபிசி உலக சேவை இந்தப் போட்டியை நடத்தியது. இதில் அதிகபட்சமாக வாக்குகள் இந்தியாவில் இருந்து தான் வந்தன என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் வாக்களித்தவர்களில் ஜப்பானிய பிரதமர் ஜூனிசிரோ கொசுமி, பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர்மார்க்கோசின் மனைவி இமெல்டா ஆகியோரும் அடக்கம்.
இந்தப் போட்டியின் இறுதி முடிவுகள் டிசம்பர் 21ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
-->












Click it and Unblock the Notifications