சென்னையில் வக்கீல் சுட்டுக் கொலை: ம.பியில்முக்கியக் குற்றவாளி கைது
சென்னை:
சென்னை தி. நகர் பகுதியில் வக்கீல் மதனகோபால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக்குற்றவாளி இக்பால் கான் என்பவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இக்பால் கான் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே ம.பியைச் சேர்ந்த இரண்டுபேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொலை நடந்ததன் பின்னணி: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகம்மது ஹசன்.இவர் ஒரு போதைப் பொருள் கடத்தல்காரர்.
சர்வதேச அளவில் பல்வேறு போதைப்பொருள் கடத்தல், விற்பனைக் கும்பலுடன் தொடர்பு வைத்திருக்கும்இவருக்கும், சென்னையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கும் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாகநட்பு ஏற்பட்டது.
போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு வக்கீலாக இருந்து வந்தார் மதனகோபாலுக்கும் பாலகிருஷ்ணனின்சகோதரி விஜயலட்சுமிக்கும் அந்தச் சமயத்தில் தொடர்பு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன், மதனகோபால் தன்னை ஏமாற்றி விட்டதாக ஹசனிடம் கூறினார்.
இதையடுத்து மதனகோபாலைத் தீர்த்துக் கட்ட ஹசன் முடிவு செய்தார். தனது அடியாளான இக்பால் கானைஅழைத்து ரூ.3 லட்சம் பேசி அவரை சென்னைக்கு அனுப்பினார்.
இக்பால் கான் தன்னுடன் ராஜேந்திர குமார் சர்மா, ஜலீல் ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார்.
புறநகரான போரூரில் தங்கியிருந்து சில நாட்கள் மதன கோபாலை நோட்டம் விட்ட இவர்கள், கடந்த ஜூலைமாதம் 6ம் தேதி இரவு தி. நகர் பாண்டி பஜார் பகுதியில் காரில் வந்து இறங்கிய மதன கோபாலை சுற்றிவளைத்தனர். பின்னர் இக்பால் கான், மதன கோபாலை சுட்டுக் கொன்றான்.
இதையடுத்து போலீஸார் தற்போது முக்கிய குற்றவாளியான இக்பால் கான் உள்ளிட்ட நான்கு பேரையும் கைதுசெய்து விட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மத்தியப் பிரதேசத்திலிருந்து சென்னை கொண்டு வரப்பட்டு விட்டனர்.
-->