செங்கல்பட்டில் குழந்தையை கொன்று தம்பதி தற்கொலை
செங்கல்பட்டு:
செங்கல்பட்டில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன் 2 வயது குழந்தையைக் கொன்று விட்டு, மனைவியுடன்தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டில் வசித்து வந்தவர் துரைராஜ். அவருடைய மனைவி பெயர் தனலட்சுமி. இவர்களுக்கு இரண்டுவயதில் ஒரு ஆண் குழந்தை உண்டு.
துரைராஜுக்கு புற்று நோய் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்த நிலையில் புற்று நோயின் தீவிரம் தாங்க முடியாத காரணத்தால் துரைராஜ் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.
இதையடுத்து துரைராஜ்-தனலட்சுமி தம்பதியினர் தங்களுடைய குழந்தையை விஷம் வைத்துக் கொன்றனர்.
குழந்தை இறந்ததும் துரைராஜும் தனலட்சுமியும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications