For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலம் அரசு மருத்துவமனை அவலம் தொடர்கிறது

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்களின் தவறான சிகிச்சையால் 2 வயதுக் குழந்தையின் வலது கை அழுகிவிட்டது. கையை எடுத்தால் தான் அந்த குழந்தை பிழைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருவோர் படும் அவலங்கள் தொடர்ந்து வருகின்றன.

சமீபத்தில் தான் கர்ப்பிணி, சிறுமி உள்ளிட்ட சிலர் அடுத்தடுத்து இறந்ததைத் தொடர்ந்து ஒரு டாக்டர் உள்பட 13பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் டாக்டர்கள் சங்கம் விடுத்த வேலைநிறுத்த மிரட்டலைத் தொடர்ந்துஇந்த சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் சேலம் அருகே உள்ள சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் தனது 8 மாதக் குழந்தைக்குவயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார்.

அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் குழந்தையின் வலதுகை திடீரென்று நீல நிறமாக மாறி,அழுக ஆரம்பித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு டாக்டர்களிடம் கேட்டபோது, "நீ உன் வேலையைப் பார், நாங்கள் எங்களதுவேலையைப் பார்க்கிறோம்" என்று தாறுமாறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் குழந்தையின் வலது கையை எடுத்தால் தான் அது உயிர் பிழைக்கும் என்ற நிலை ஏற்பட்டது.

இதையடுத்து பாபுவின் உறவினர்கள் மருத்துவமனையிலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல்அறிந்ததும் கலெக்டர் ராதாகிருஷ்ணன் விரைந்து வந்து பாபுவையும், அவரது உறவினர்களையும்சமாதானப்படுத்தினார்.

அரசு மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியப் போக்கினால் அந்தப் பக்கம் போவதற்கே நோயாளிகள் யோசிக்கஆரம்பித்துள்ளனர். ஆனாலும் ஏழை நோயாளிகளுக்க வேறு என்ன தான் வழி?

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X