சென்னை சுவர்களில் இனி போஸ்டர் ஒட்ட தடை
சென்னை:
வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் சென்னையின் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் போஸ்டர்கள்ஒட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியும், மாநகர போலீசாரும் இணைந்து இந்தநடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே போஸ்டர் ஒட்டும் கலாச்சாரம் நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமுமாக வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
குட்டிச் சுவரைக் கூட விட்டு வைக்காமல் அதிலும் போஸ்டர் ஒட்டி வருகிறார்கள். சிறிது நேரம் அசையாமல்நின்றால் நம் மீது போஸ்டர் ஒட்டிவிடும் நிலை உள்ளது.
சினிமா போஸ்டர்கள், அரசியல் போஸ்டர்கள் தவிர பிறந்த நாள், இறந்த நாள், காது குத்து, சடங்கு, திருமணம்என்று சகலத்துக்கும் போஸ்டர் ஒட்டப்படுகிறது.
இந்த ரக போஸ்டர்கள் மதுரையில் தான் மிகவும் பிரபலம் என்றாலும், சென்னையிலும் போஸ்டர்களுக்குக்குறைவில்லை. ஆனால் இங்கு சினிமா மற்றும் அரசியல் போஸ்டர்கள் தான் அதிகம்.
இதனால் நகரின் அழகு பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை இப்போது தான் சென்னை மாநகராட்சி உணரத்தொடங்கியுள்ளது.
சென்னையில் கண்ட இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று நினைத்த சென்னைமாநகராட்சி, போலீசாரின் உதவியை நாடியுள்ளது.
இதையடுத்து இரு தரப்பினரும் கூடி ஆலோசித்து சில முடிவுகளை எடுத்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் சினிமாதியேட்டர் அதிபர்கள் மற்றும் சில அரசியல்வாதிகளும் கூட கலந்து கொண்டனர்.
தியேட்டர் அதிபர்கள் கூட சென்னை மாநகராட்சியின் இந்த யோசனையை ஏற்றுக் கொண்டனர். இருந்தாலும்சினிமா போஸ்டர்கள் ஒட்டுவதற்குத் தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
அதன்படி இனி சென்னையில் பொது இடங்களில் உள்ள சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டுவதற்கு மாநகரப்போலீசார் தடை விதித்துள்ளனர். போஸ்டர் அடித்து ஒட்டும் நபர்களையும் அழைத்து போலீசார்அறிவுறுத்தியுள்ளனர்.
முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி கட்டடமான ரிப்பன் பில்டிங்கிலிருந்து ஈ.வே.ரா. சாலை முடியும் வரை உள்ளபகுதிகளில் உள்ள சுவர்களில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் போஸ்டர்கள் ஒட்டுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இங்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் சினிமா மற்றும் போஸ்டர்களை ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்என்றும், அதில் மட்டும் தான் போஸ்டர்களை ஒட்ட வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்தக் குறிப்பிட்ட இடத்தைத் தவிர வேறு எங்கு போஸ்டர் ஒட்டினாலும், அதில் தொடர்புடையவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த முதற்கட்ட நடவடிக்கை வெற்றி பெற்றால் இத்திட்டம் சென்னையின் மற்ற பகுதிகளுக்கும்விரிவுபடுத்தப்படும்.
-->












Click it and Unblock the Notifications