For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஸ்களை ஒட்டுமொத்தமாக தனியார்மயமாக்கி விடலாம்: பா.ஜ.க. யோசனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக போக்குவரத்துக் கழகத்தின் 50 சதவீத பஸ்களை தனியார்மயமாக்குவதற்குப் பதிலாக ஒட்டுமொத்தமாகவேதனியார்மயமாக்குவதே நல்லது என்று தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் எச். ராஜா கூறினார்.

இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

தற்போது தமிழக அரசு 50 சதவீத பஸ்களை தனியாருக்கு விடப் போவதாக அறிவித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். அரசு பஸ்களில் இலவச பாஸ் மூலம் பள்ளிக்குச் சென்றுவரும் மாணவ-மாணிவிகளும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

இது குறித்து தமிழக அரசு எதையும் சொல்லவில்லை.

இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்க ஒட்டுமொத்த போக்குவரத்துக் கழகத்தையும் தனியார்மயமாக்கி விட்டால்இத்தகைய பிரச்சனைகளே எழாது என்றார் ராஜா.

மார்க்சிஸ்ட் வேண்டுகோள்:

இதற்கிடையே பஸ்களை தனியார்மயமாக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசின் இந்தத் திட்டத்தால் தனியார்கள் தான் பஸ்கட்டணங்களை உயர்த்தி கொள்ளை லாபம் அடைவார்கள்என்று அக்கட்சி எச்சரித்துள்ளது.

மேலும் பொதுமக்களுக்கோ, இலவச பஸ் பாஸ் திட்டங்களை அனுபவித்து வரும் மாணவர்களுக்கோ இதனால்திண்டாட்டம் தான் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X