For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுப்பிரமணியம் சுவாமியுடன் ரஜினி சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார்.

சுவாமியின் சென்னை சாந்தோம் இல்லத்துக்கு இன்று காலை சென்ற ரஜினி அவருடன் சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

இருவரும் நதிகள் இணைப்பு குறித்து விவாதித்தாக ஜனதா கட்சியின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அப்போது ரஜினியை தீவிர அரசியலுக்கு வருமாறு சுவாமி அழைத்ததாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்பின்போது ஜனதா கட்சியின்மாநிலத் தலைவரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சந்திரலேகாவும் உடனிருந்தார்.

அப்போது ஜனதா கட்சி வெளியிட்டுள்ள இந்திய நதிகளை இணைத்தால் என்ற புத்தகத்தையும் ரஜினிக்கு சுவாமி வழங்கினார்.

சமீபத்தில் ரஜினி உண்ணாவிரதம் இருந்தபோது அவரை சுப்பிரமணியம் சுவாமியும் சந்திரலேகாவும் நேரில் சந்தித்து சால்வைஅணிவித்து வாழ்த்தியது நினைவிருக்கலாம்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X