4 ஆண்டுகளாக டெலிபோன் பில் கட்டாத சோ.பா.
Subscribe to Oneindia Tamil
பரமக்குடி:
நான்கு ஆண்டுகளாக டெலிபோன் பில் கட்டாத தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் பாக்கித்தொகையான ரூ.2.48 லட்சத்தை அபராதத்துடன் உடனடியாகக் கட்டுமாறு பரமக்குடி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தொகுதி எம்.எல்.ஏவான சோ.பாவின் வீடு பரமக்குடி பாரதி நகரில் உள்ளது.
இந்த வீட்டின் டெலிபோன் பில் கடந்த 1994 முதல் 1998ம் ஆண்டு வரை கட்டப்படவில்லை.
இதுதொடர்பாக தொலைத் தொடர்புத்துறை சார்பில் பலமுறை சோ.பாவுக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கட்டவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து காரைக்குடி தொலைத் தொடர்பு மாவட்ட கோட்ட பொது மேலாளர் பரமக்குடி துணை மாஜிஸ்திரேட்கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாத்த மாஜிஸ்திரேட் கோபால், பாக்கித்தொகையை உடனடியாக கட்டுமாறுசோ.பாலகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார்.
-->












Click it and Unblock the Notifications