புத்தாண்டு "மப்பு"க்காக கடத்தி வரப்பட்ட "பாரின் சரக்குகள்" பறிமுதல்
சென்னை:
புத்தாண்டு தினத்தன்று விற்பதற்காக சிங்கப்பூர் மற்றும் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம்மதிப்புள்ள வெளிநாட்டு மதுவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய தேசிசென்னை பாரிமுனை பகுதியில் உள்ள முத்து மாரி செட்டி தெருவில் உள்ள ஒரு வீட்டில் பூக்கடை போலீஸார் திடீர்சோதனை நடத்தினர்.
அப்போது 500 பாட்டில்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது சிக்கியது. அனைத்தும் விஸ்கி மற்றும் ரம்வகையைச் சேர்ந்தவை. இவை தவிர 600 கேன் பீரும் சிக்கியது.
இவற்றைப் பதுக்கி வைத்திருந்த செல்வராஜ் மற்றும் 19 வயதான காளீஸ்வரன் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர்.
இவர்களிடம் விசாரித்தபோது, புத்தாண்டுக்கு முதல் நாளன்று இரவு கொண்டாடத்தில் ஈடுபடுவோரிடம்கள்ளத்தனமாக விற்பதற்காக இந்த மது வகைகளை கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பதாக தெரிய வந்தது.
இவை அனைத்தும் சிங்கப்பூர் மற்றும் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்டவை என்பதும் தெரிய வந்தது.
-->












Click it and Unblock the Notifications