ஆசிரியர்கள் ஓய்வு முறையில் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆசிரியர்கள் ஓய்வு பெறும் முறையில் மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு.
ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால் அந்தக் கல்வியாண்டின் இறுதி வரை பணியாற்ற அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இடையில் ஆசிரியர் ஓய்வு பெற்றால் மாணவர்களின் பாடம் பாதிக்கப்படும் என்பதால் இவ்வளவு நாட்களும்இந்த முறையே அமலில் இருந்தது.
ஆனால் தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு ஆசிரியர் எப்போது ஓய்வு பெறுகிறாரோஅந்த மாதத்திலேயே அவர் வீட்டுக்குச் சென்று விட வேண்டும். கல்வியாண்டின் இறுதி வரை அவர்பணியில்தொடர மாட்டார்.
மாநில அரசின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications