போன் பில் பாக்கியை தவணை முறையில் செலுத்த தயார்: சோ.பா.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போன் பில் பாக்கித் தொகையை தவணை முறையில் கட்ட தயாராக உள்ளதாக காங்கிரஸ் தலைவர்சோ.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பரமகுடியில் கடந்த 4 ஆண்டுகளாக தனது வீட்டு போன் பில்லைக் கட்டாமல் உள்ளார் சோ.பாலகிருஷ்ணன். இந்தபாக்கித்தொகை ரூ. 2.50 லட்சத்தை உடனடியாகக் கட்ட வேண்டும் என்று சமீபத்தில் பரமக்குடி கோர்ட்உத்தரவிட்டது.

இதுகுறித்துசென்னையில் செய்தியாளர்கள் கேட்டபோது, சோ.பா கூறியதாவது:

போன் பில்லைக் கட்டத் தயாராகவே உள்ளேன். தவணை, தவணையாக கட்ட நான் ரெடி. கடந்த முறை நான்எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அரசு சார்பில் எனக்கு 2 தொலைபேசிகள் வழங்கப்பட்டன.

அதில் ஒரு தொலைபேசியில் இருந்த எஸ்.டி.டி. வசதியை, பரமக்குடியில் உள்ள எனது சொந்த போனுக்குமாற்றுமாறு கேட்டுக் கொண்டேன். அது போலவே செய்யப்பட்டது

இந்த எஸ்.டி.டி. வசதிக்கான கட்டணத்தை மாநில அரசே செலுத்தி விடும் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால்ரூ. 2.50 லட்சம் வரை பாக்கித் தொகை இருப்பதும், அதை நான்தான் கட்ட வேண்டும் என்றும் கோரி கோர்ட்டில்தொலைபேசித்துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது.

இந்த பாக்கித் தொகையை நானே கட்டி விடுவேன். அரசிடம் பொறுப்பை தள்ளி விட மாட்டேன். தவணைமுறையில் கட்டுவதற்கு அனுமதி தரக் கோரி எனது வக்கீல் மூலம் கோர்ட்டில் அனுமதி பெற முடிவு செய்துள்ளேன்என்றார் சோ.பா.

இது தவிர இவருக்குச் சொந்தமான ஒரு மில்லில் பல லட்சம் அளவுக்கு மின்சாரக் கட்டண பாக்கிவைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+