ஜெவுக்கு முதுகெலும்பில் வலி: 4 நாட்கள் ஓய்வெடுக்க அறிவுரை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். நான்கு நாட்கள் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும்என்று அவருக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நேற்று மாலை திடீரென ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். தனது உதவியாளர்களைத்தவிர்த்துவிட்டு பாதுகாவலர்கள் மட்டும் உடன் வர மருத்துவமனைக்கு வந்தார்.
முதுகு வலிக்கு சிகிச்சை எடுக்கவே அவர் அப்பல்லோவுக்கு வந்தார். அவரை அப்பல்லோ மருத்துவமனைமுதுகெலும்புப் பிரிவு டாக்டர் ஜாஜன் ஹெக்டே தலைமையிலான குழுவினர் சோதனை செய்தனர்.
இதன் பின்னர் சிறிது நேரத்தில் ஜெயலலிதா போயஸ் கார்டன் திரும்பிவிட்டார். இதையடுத்து டாக்டர் ஜாஜன்ஹெக்டே வெளியிட்ட அறிக்கையில்,
குனியும் போதும், உட்காரும்போதும் முதுகுப் பகுதியில் கடுமையாக வலி ஏற்படுவதாக டாக்டர்களிடம்ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
அப்போது அவரது முதுகெலும்பின் கீழ் பகுதியில் வலி ஏற்படுவது தெரியவந்தது. அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன்மற்றும் பிற சோதனைகள் செய்து பார்க்கப்பட்டன.
அவரது மூடடுப் பகுதியில் தொடர்ந்து உராய்வும், அதிக வேலைப் பளுவும் கொடுக்கப்படுவதால் ஏற்பட்ட வலிஇது என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து நான்கு நாட்களுக்கு அவர் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும், மருந்துகள் சாப்பிட்டு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 1997ம் ஆண்டும் இதேபோல, ஜெயலலிதாவுக்குப் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது 24 மணி நேர ஓய்வில்இருக்குமாறு ஜெயலலிதா அறிவுறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications