ஆக்கிரமிப்பு நிலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Thilagavathi with Jayalalithaaசென்னையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை போலீஸ் இயக்குநரகத்தின் புதிய அலுவலகத்தைமுதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் இந்த புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

முதலில் அண்ணாசாலையில் லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்கு அலுவலகம் அமைக்கப்பட்டது. போலீசாரின்எண்ணிக்கையும் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைகளும் அதிகரித்ததையடுத்து அண்ணாநகரிலும்நந்தனத்திலும் மேலும் 2 கட்டடங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன.

ஏகப்பட்ட பணம் வாடகைக்கே செலவானதால் சொந்தக் கட்டடம் ஒதுக்க லஞ்ச ஒழிப்புத் துறை கோரியது.

இதையடுத்து இந்தக் கட்டடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலில் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு குடியிருப்புவளாகமாகத் தான் இங்கு 8 பெரிய வீடுகள் கட்டப்பட்டன. ஆனால் ஆக்கிரமிப்பு இடத்தில் இந்த வீடுகள்கட்டப்பட்டுள்ளதாக கூறி நீதிபதிகள் இங்கு குடியேற மறுத்து விட்டனர்.

இதையடுத்து இதில் ஒரு பங்களாவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இயக்குநரகத்திற்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

DAVC மற்ற வீடுகள் பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆக்கிமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் இயங்க உள்ளது.

இக் கட்டடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார். லஞ்ச ஒழிப்பு கூடுதல்டிஜிபி திலகவதி, அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், செம்மலை, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர்விஜயக்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+