நீதிமன்ற மாடிப்படியில் தவறி விழுந்து உருண்ட போலீஸ்காரர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற மாடிப் படியில் ஏறிய போது, போலீஸ் தலைமைக் காவலர் ஒருவர் தவறி விழுந்துபரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம் வட பொன்பரப்பி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருந்தவர் தங்கையன். ஒருவழக்குத் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வந்திருந்தார்.
அரசு வக்கீலின் அறைக்குச் செல்வதற்காக வழக்கு தொடர்பான கோப்புகளுடன் மாடிப்படியில் ஏறிக்கொண்டிருந்தார்.
நிருபர்கள் அறை முன்பிருந்த மாடிப்படியில் ஏறியபோது கால் தவறி கீழே விழுந்தார். அப்போது அறையில் இருந்தநிருபர்கள் இதைப் பார்த்து ஓடி வந்து அவரைப் பிடித்தனர். அதற்குள் அவரது தலையில் பலமாக அடிபட்டு ரத்தம்வழிந்தது. அவர் மயங்கிவிட்டார்.
உடனடியாக டாக்டர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்தனர். ஆனால், டாக்டர்கள்வந்து பார்த்தபோது தங்கையன் இறந்து போயிருந்தார்.
-->












Click it and Unblock the Notifications