For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காடுவெட்டி குருவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தலைமறைவாகியுள்ள பாமக எம்.எல்.ஏவான காடுவெட்டி குருவின் முன் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

செங்கல்வராயன் அறக்கட்டளைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி உள்ளிட்டஅறங்காவலர்கள் பதவியேற்க வந்த போது அவர்களைப் பாமகவினர் தடுத்து கலாட்டா செய்தனர். அவர்களில்பாமக தலைவர் ஜி.கே. மணியும் காடுவெட்டி குருவும் அடங்குவர்.

இதையடுத்து இவர்கள் இருவருமே தலைமறைவாகிவிட்டனர். மணி மட்டும் கடந்த வாரம் எழும்பூர் நீதிமன்றத்தில்சரணடைந்தார். இவ்வழக்கு தொடர்பாக 17 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாகியுள்ள காடுவெட்டி குருவின் மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளன.

கடந்த 1997ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் கோட்டியால் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுசங்கத்தை சட்டவிரோதமாக இழுத்து மூடியதாக அவர் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது.

தொடர்ந்து 1998ம் ஆண்டு ஜெயங்கொண்டத்தில் நடந்த ஒரு கண்டனப் பொதுக் கூட்டத்தில் பொதுமக்களையும்,போலீசாரையும் அச்சுறுத்தும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் கடந்த 2000ம் ஆண்டு மேலூர் கிராமத்தில் நிலத்தை கையகப்படுத்த வந்த வருவாய் அதிகாரிகளிடம்வெடிகுண்டு வீசுவோம் என்று கூறி மிரட்டியது தொடர்பாக காடுவெட்டி குரு மீது மற்றொரு வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இந்த மூன்று வழக்குகள் தொடர்பாக காடுவெட்டி குருவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டுகளைப்பிறப்பித்து ஜெயங்கொண்டம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து தலைமறைவாகியுள்ள காடுவெட்டி குரு முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுஒன்றைத் தாக்கல் செய்தார்.

நீதிபதி மலை சுப்பிரமணியம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X