For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுத்த தமிழ் பெயர்கள் சூட்டிய தலித்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசின் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த2,000 பேர் தங்களது இந்துப் பெயர்களைக் கைவிட்டுவிட்டு சுத்தத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டிக் கொண்டுள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இந்த பெயர் மாற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில்ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், எல்லோரும் தங்களது குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள். நான் எனதுதந்தை ராமசாமியின் பெயரை இன்று முதல் தொல்காப்பியர் என்று மாற்றி சூட்டுகிறேன். இதை எனது தந்தையும்ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன் என்றார்.

அதேபோல, திருமாவளவனின் சகோதரி வளர்மதி தனது பெயரை வான்மதி என்று மாற்றிக் கொண்டார். மற்றொருஉறவினர் மாலதி தனது பெயரை மலைமதி என்று மாற்றிக் கொண்டார்.

திருமாவளவன் என்ற பெயர் மகாவிஷ்ணுவின் பெயர் என்று தவறாக கூறப்படுகிறது, உண்மையில் அது சுத்தமானதமிழ்ப் பெயர், மன்னன் என்று அதற்குப் பொருள். அதனால் எனது பெயரை மாற்றிக் கொள்ளவில்லை என்றார்திருமாவளவன்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் நிர்வாகிகள் பாவல் (பாவலன்), கோவிந்தசாமி (கோவேந்தன்), முருகன்(அழகன்), சீதாராமன் (ராவணன்) ஆகியோரும் தங்களது பெயர்களை மாற்றிக் கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,061 தலித்கள் தங்கள் பெயரை மாற்றிக் கொண்டனர். இந்த மாவட்டத்தில்தான் அதிகம் பேர் பெயர்களை மாற்றினர்.

அதுபோல சென்னையைச் சேர்ந்த 400 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 480 பேரும், கடலூர்மாவட்டத்தைச் சேர்ந்த 500 பேரும் தங்களது இந்துப் பெயர்களை மாற்றிக் கொண்டுள்ளதாக திருமாவளவன்தெரிவித்தார்.

இந்தப் பெயர் மாற்றம் தமிழகத்தில் தலித்கள் மத்தியில் தொடர்ந்து நடக்கும் என்றும் மேலும் 6,000 பேர்பெயர்களை மாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

நிகழ்ச்சியின்போது, தமிழ் அறிஞர் இறைக்குறவனார் எழுதிய தமிழ்ப் பெயர்கள் என்ற நூல் வெளியிடப்பட்டது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X