முதுமலை வனப் பகுதியில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை

Subscribe to Oneindia Tamil

ஊட்டி:

முதுமலை காட்டுப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் நடமாடி வரும் வீரப்பன் கும்பல் சுற்றுலாப் பயணிகளைக் கடத்திச் செல்ல வாய்ப்பு இருப்பதால் இந்தக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சிங்காரம், மவநல்லா, போக்கபுரம், சிறுயூர் ஆகிய காட்டுப் பகுதிகளுக்குள் நுழையவே சுற்றுலாப் பயணிகளுக்குத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதுமலை வன விலங்கு சரணாலயத்தின் முக்கிய சாலைப் பகுதி தவிர காட்டுக்குள் எந்த வாகனமும் நுழையக் கூடாது என்றுஎச்சரிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் டூரிஸ்ட் ஆபரேட்டர்கள், பஸ்கள், வேன்கள், கார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என வனத்துறையின் வடக்குப் பகுதி உதவிப் பாதுகாவலர் என்.சீனிவாசன் எச்சரித்துள்ளார்.

போலீசார், வனத்துறையினர் அல்லது சுற்றுலாப் பயணிகளை வீரப்பன் கடத்தலாம் என்று அதிரடிப்படையினர் கருதுகின்றனர்.ஏற்கனவே, காவல் நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுவிட்டது.

இப்போது சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டத்தையும் காட்டுப் பகுதியில் கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளது தமிழக அரசு.

இதே போன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு கர்நாடக அரசுக்கும் தமிழகம் அறிவுறுத்தியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+