சிறுத்தை கடித்து 4 சிறுவர்கள் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வனப் பகுதியிலிருந்து கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை கடித்து 4சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

போச்சம்பள்ளி கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை அங்கு விளையாடிக் கொண்டிருந்த தங்கராஜு உள்பட நான்குசிறுவர்கள் மீது பாய்ந்தது. இதைப் பார்த்து பயந்து போன சிறுவர்கள் அங்கிருந்து ஓடினர்.

ஆனால் சிறுத்தை அவர்களை விரட்டிச் சென்று கடித்ததில் நான்கு சிறுவர்களும் காயமடைந்தனர். சிறுவர்களின்அலறலைக் கேட்ட கிராமத்து மக்கள் ஓடிவந்தனர். இதையடுத்து சிறுத்தை அங்கிருந்து ஓடிவிட்டது.

கிராமத்து அருகில்தான் அது ஒளிந்திருப்பதாகவும், மீண்டும் கிராமத்திற்குள் அது வரும் என்றும் கிராமத்து மக்கள்அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை ஆட்சித் தலைவர் சித்திக்சென்று பார்த்து நலம் விசாரித்தார்.

பின்னர் சிறுத்தையை சுட்டுக் கொல்லவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சிறுத்தையைத்தேடும் பணியில் வனத்துறை மற்றும் கிராமத்து மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+