Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்கி பகவான் சொத்து குவிப்பு: விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கல்கி பகவான் என்று அழைக்கப்படும் விஜயக்குமாரின் சொத்துக்கள் குறித்து 2 வாரங்களில் விசாரித்து அறிக்கைஅளிக்குமாறு வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த விஜயக்குமார் என்ற கல்கி பகவானின் சொத்துக்கள் குறித்து உயர்நீதிமன்றத்தில் ஆந்திரமாநிலம் சித்தூரைச் சேர்ந்த விஸ்வநாத சுவாமி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

தனது மனுவில், சமூக சேவை என்ற பெயரில் ரூ.300 கோடிக்கும் மேல் கல்கி பகவான் சேர்த்துள்ளார். ஆனால்இந்தப் பணத்தை சமூக சேவைக்கோ, கிராம மக்களின் நலனுக்கோ பயன்படுத்தாமல் தனியார் நிறுவனங்களுக்கும்,தனது மகனின் வியாபாரத்திற்கும் பயன்படுத்தி வருகிறார். எனவே அவரது சொத்து குறித்து விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று விஸ்வநாத சுவாமி கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன் ஆகியோர் முன்னிலையில் இன்றுவிசாரணைக்கு வந்தது.

அப்போது, கல்கி பகவான் சொத்துக்கள் குறித்து விசாரிக்க வருமான வரித் துறை சார்பில் அவகாசம்கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை தருமாறு நீதிபதிகள்உத்தரவிட்டனர்.

மேலும் தமிழக டி.ஜி.பி., சி..பி.ஐ இயக்குநர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+