2,867 யாத்ரீகர்கள் ஹஜ் பயணம்: ஜனவரி 4ல் தொடக்கம்
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த ஹஜ் 2,867 யாத்ரீகர்கள் வரும் ஜனவரி 4ம் தேதி தங்களது ஹஜ் புனித யாத்திரையைதொடங்குகிறார்கள்.
அடுத்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்கு மாநில அரசு ரூ.20 லட்சம் நிதியை ஒதுக்கியுள்ளது. ஜனவரி 4ம் தேதிதொடங்கி 10ம் தேதி வரை இது நடைபெறும்.
இந்த ஹஜ் யாத்திரையில் 2,867 பேர் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இவர்களில் 4 குழந்தைகளும் அடங்குவர்.
தமிழ்நாடு தவிர பாண்டிச்சேரி, அந்தமான், நிக்கோபார் ஆகிய மாநலங்களைச் சேர்ந்தவர்களும் சென்னைவழியாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவுள்ளனர்.
சென்னையிலிருந்து 7 சிறப்பு விமானங்கள் ஹஜ் யாத்திரைக்காக இயக்கப்படவுள்ளன. ஒவ்வொரு விமானத்திலும்410 யாத்ரீகர்கள் அழைத்துச் செல்லப்படுவர்.
ஹஜ் கமிட்டி தலைவரும், மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான அன்வர் ராஜா தலைமையில் கூடியதமிழ்நாடு ஹஜ் கமிட்டிக் கூட்டத்தில் மேற்கண்ட முடிவுகள் இறுதி செய்யப்பட்டன.
-->