கல்லூரியின் பெயரால் நிலத்தை அபகரித்த வழக்கு: நீதிமன்றத்தில் தம்பித்துரை மனு
சென்னை:
ஒசூரில் உள்ள தனது மனைவியின் அதியமான் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரிக்குநில உச்சவரம்புச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று மாஜிகல்வி அமைச்சர் தம்பித்துரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தம்பித்துரை மனைவி நடத்தி வரும் அதியமான் கல்லூரிக்கு மட்டும் நில உச்சவரம்புச் சட்டத்திலிருந்து விலக்குஅளிக்கப்பட்டுள்ளதாக தனது மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கல்வி அமைச்சராக இருந்த தம்பிதுரைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
டான்சி நிலத்தை சுட்ட வழக்கில் வசமாக மாட்டிக் கொண்டு முழித்து வரும் முதல்வர் ஜெயலலிதா இதனால்கடுப்படைந்தார். இதையடுத்து தம்பிதுரையையும், நிலத்தை ஒதுக்க உதவிய வருவாய்த்துறை அமைச்சர் தளவாய்சுந்தரத்துக்கும் கல்தா கொடுத்தார்.
இதற்கிடையே, தம்பிதுரையின் கல்லூரிக்கு மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதிலும் 63 கல்லூரிகளுக்கு இதுபோலஉச்சவரம்புச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அரசு வக்கீல் என்.ஆர்.சந்திரன் நீதிமன்றத்தில்தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அதுதொடர்பான ஆவணங்களை புதன்கிழமை (இன்று) தாக்கல் செய்யுமாறு தலைமை நீதிபதிசுபாஷன் ரெட்டி, நீதிபதி நாகப்பன் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.
இதையடுத்து இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தம்பித்துரை சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில், நில உச்சவரம்புச் சட்டத்திலிருந்து கல்லூரிகளுக்கு விதி விலக்கு அளிப்பது சாதாரணமான விஷயம்தான்.அதுபோலவே, அதியமான் கல்லூரிக்கும் அளிக்கப்பட்டது.
மேலும் 1987ம் ஆண்டு முதல் அதியமான் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 46கல்லுரிகளுக்கும், அதிமுக ஆட்சிக்காலத்தில் 21 கல்லூரிகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
மேலும், நான் அமைச்சராக இருந்த காலத்தில் அதியமான் கல்லூரிக்கு அமைச்சர் என்ற முறையில் எந்தவிதமானசலுகைகளும் காட்டப்படவில்லை.
கல்வித்துறை தனியார்மயமாக்கல் என்ற அரசின் கொள்கைக்கு அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த வழக்குபாதகமாக அமைந்து விடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தம்பிதுரை தனது மனுவில் கூறியுள்ளார்.
இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications