ஓவர் வாய் எஸ்,எஸ். சந்திரனுக்கு டோஸ்
சென்னை:
அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாயின் முதுமையைக் கிண்டலடித்துப் பேசிய நடிகர் எஸ்.எஸ். சந்திரன் எம்.பிக்கு முதல்வர் ஜெயலலிதா கடுமையாக டோஸ் விட்டார்.
மேலும் அம்மா தான் சின்னம்மா, சின்னம்மா தான் அம்மா என்று சசிகலாவை ரொம்பவும் தூக்கி வைத்துப் பேசினார். அதை மிகக் கடுப்புடன் கவனித்த ஜெயலலிதா பின்னர் பேசுகையில்,
எஸ்.எஸ். சந்திரன் பொதுக் கூட்ட மேடைகளில் பேசும்போது பிரதமர் வாஜ்பாயை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்துப் பேசுகிறார். அவருக்கு வயதாகிவிட்டது, நடக்க முடியவில்லை என்பதை எல்லாம் கிண்டலடிக்கிறார்.
நாளை எனக்கும் கூடத் தான் வயதாகும். அப்போது என்னையும் அப்படித்தான் பேசுவாரா? பொதுக் கூட்ட மேடையானாலும் பார்லிமென்ட் ஆனாலும் இவ்வாறு பேசுவதை நான் அனுமதிக்க மாட்டேன் என்றார்.
நாளை டெல்லி பயணம்:
இதற்கிடையே தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா நாளை மாலை டெல்லி செல்கிறார்.
டெல்லியில் பிரதமர் தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்ளும் இக் கூட்டம் சனிக்கிழமை நடக்கிறது. அதற்கு மறுநாள் காவிரி ஆணையக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமருக்கு ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
-->