For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நக்சல்கள் பயங்கர தாக்குதல் : 18 போலீசார் சாவு

By Staff
Google Oneindia Tamil News

ஜாம்ஷெட்பூர்:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 18 போலீசார் கொல்லப்பட்டனர். 20 பேர்படுகாயமடைந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சிங்பம் என்ற மாவட்டத்தில் நேற்று காலை இச் சம்பவம் நடந்தது. ஒரிஸ்ஸாவைஒட்டியுள்ள இந்தப் பகுதியில் மாவோயிஸ்டுகளின் செல்பாடுகள் அதிகம் உள்ளன.

சமீபத்தில் ஒரிஸ்ஸா போலீஸ் வேனை மாவோயிஸ்டுகள் கண்ணி வெடி வைத்துத் தகர்த்தனர். அதில் பல போலீசார் பலியாயினர்.

முன்னதாக சிங்கம் மாவட்டத்தில் காட்டுப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தலையாரியை நக்சல்கள் சுட்டுக் கொன்றனர். அவரதுஉடல் காட்டுப் பகுதியில் கிடந்தது. இதையடுத்து அந்த உடலை எடுக்க மிக பெரும் படையுடன் போலீசார் சென்றனர்.

காட்டுக்குள் போலீசார் நுழைந்தவுடன் அவர்களை சுமார் 70 தீவிரவாதிகள் சுற்றி வளைத்து சுட்டனர். இதில் 18 போலீசார் அந்தஇடத்திலேயே இறந்தனர். அங்கிருந்த 11 போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

பின்னர் இறந்த மற்றும் காயமடைந்த போலீசாரிடமும் இருந்த ஆயுதங்களையும் பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர். தாக்குதலில் மேலும் 20போலீசார் படுகாயமடைந்தனர். இவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சம்பவம் நேற்று காலை நடந்திருந்தாலும் இன்று தான் அது குறித்த தகவல்கள் வெளியே வர ஆரம்பித்துள்ளன.

Sᶵz -70; Ea }vࠓ B

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X