For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாராயம் குடிக்க தாலியைத் தராத மனைவியை எரித்தவருக்கு ஆயுள் தண்டனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சாராயம் குடிப்பதற்கு தனது தாலியை கழற்றிக் கொடுக்காத மனைவி மற்றும் மாமியாரை தீ வைத்துக் கொளுத்தியநபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சென்னை மணலியைச் சேர்ந்தவர் குமரசேன். இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு 1991ம் ஆண்டு திருணம்நடந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் குமரேசனுக்கும், தமிழரசிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

குடிப்பதற்கு கையில் பணம் இல்லாததால், மனைவியிடம் தாலியை கழற்றிக் கொடுக்குமாறு கூறியுள்ளார்குமரேசன். ஆனால் தமிழரசி தாலியைத் தர மறுத்து விட்டார். உடன் இருந்த குமரேசனின் மாமியாரும் அவரைதிட்டினார்.

இதையடுத்து கோபத்துடன் வெளியே சென்ற குமரேசன், இரவில் வீடு திரும்பினார். கடன் வாங்கிக் குடித்திருந்தஅவர் போதையில் வீட்டுக்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் மாமியார் மீது மண்ணெண்ணைஊற்றி தீவைத்துக் கொளுத்தினார். இதில் இருவரும் அங்கேயே இறந்தனர்.

இதுதொடர்பாக குமரேசன் கைது செய்யப்பட்டு சென்னை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைநடந்தது. இதில், குமரேசனுக்கு ஆயுள்தண்டனை வழங்கி நீதிபதி ஆறுமுகம் தீர்ப்பளித்தார்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X