சென்னை வந்தார் "போலாரிஸ்" அதிபர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்தோனேஷியாவில் கைதாகி விடுதலையான "போலாரிஸ்" சாப்ட்வேர் நிறுவன அதிபர் அருண் ஜெயின் நேற்றுஇரவு சென்னை வந்து சேர்ந்தார்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட "போலாரிஸ்" நிறுவனத்துக்கும் இந்தோனேஷியாவில் உள்ள ஆர்த்தாகிரஹா வங்கிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஜெயினையும், அந்நிறுவனத்தின் மூத்தஅதிகாரியான ராஜிவ் மல்ஹோத்ராவும் ஜகார்தா போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இந்திய அரசு தலையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கடந்த 20ம் தேதி இந்தோனேஷியாபோலீசார் விடுதலை செய்தனர். ஆனால் அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளைத் திரும்ப ஒப்படைப்பதில் சிக்கல்நீடித்தது.

இதையடுத்து ஜகார்தாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்திலேயே அவர்கள் இருவரும் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று ஒருவழியாக ஜெயினிடமும், மல்ஹோத்ராவிடமும் அவர்களுடைய பாஸ்போர்ட்டுகள்ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து நேற்று இரவே அவர்கள் இருவரும் சென்னை கிளம்பி வந்தனர். அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

ஒருவர் எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் அவரை எந்த அளவுக்கு நம்பலாம் என்ற பாடத்தை நான்நன்றாகக் கற்றுக் கொண்டேன்.

அதற்காக இந்தோனேஷியாவில் எங்களுடைய பிசினஸ் நடவடிக்கைகளை நிறுத்திவிட மாட்டோம்.

உலகிலேயே நான்காவது பெரிய நாடான இந்தோனேஷியாவை அவ்வளவு எளிதாக நாம் நினைத்துவிடக்கூடாது.

அடுத்த ஒரு சில மாதங்களுக்கு வேண்டுமானால் அந்நாட்டு கம்பெனிகளுடன் பிசினஸ் வைத்துக் கொள்ளாமல்இருப்போம்.

இவ்வளவும் நடந்ததற்காகப் பயந்து போய் கிரஹா வங்கியிடம் அடிபணிந்து போய் விடவும் மாட்டோம்.எங்களைக் கைது செய்த இந்தோனேஷிய போலீசாருக்கு எதிராகப் புகார் கொடுத்துள்ளோம் என்றார் ஜெயின்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+