ராஜபாளையத்தில் அப்பல்லோ மருத்துவமனை: ராம்கோ நிறுவனம் அமைக்கிறது
ராஜபாளையம்:
தமிழகத்தின் மிக நவீன மருத்துவமனைகளில் ஒன்றான அப்பல்லோ ராஜபாளையத்திலும் ஒரு கிளையைத் தொடங்கவுள்ளது.
ஏற்கனவே மதுரையில் ஒரு அப்பல்லோ மருத்துவமனை பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இந் நிலையில் பின்தங்கிய பகுதியான ராஜபாளையத்திலும் ஒரு அப்பல்லோ மருத்துவமனை உருவாக உள்ளது.
ராம்கோ நிறுவனத் தலைவர் பி.ஏச.சி.ராமசாமி ராஜா நூற்றாண்டு டிரஸ்ட் நிறுவனத்தின் உதவியுடன் இந்த மருத்துவமனைஅமைக்கப்பட உள்ளது. மருத்துவமனையைக் கட்டுவதற்கு எல்லா செலவுகளையும் டிரஸ்ட் ஏற்கும்.
வரும் ஆண்டு செப்டம்பருக்குள் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு செயல்படத் தொடங்கும். ராம்கோ- அப்பல்லோமருத்துவமனை என்ற பெயரில் இது இயங்கும். இங்கு மதுரை- செங்கோட்டை நெடுஞ்சாலையில் 2 ஏக்கர் நிலப் பரப்பில் இந்தநவீன மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை உள்பட அனைத்து நோய்களுக்கும் தனித்தனியே நவீன பிரிவுகள்அமைக்கப்பட்டு வெளிநாட்டுக் கருவிகளும் கொண்டு வரப்பட உள்ளன.
-->