For Quick Alerts
For Daily Alerts
Just In
மகாபலிபுரம் கடலில் மூழ்கி என்ஜீனியர் பலி?
சென்னை:
மகாபலிபுரம் கடலில் மூழ்கிய சென்னையைச் சேர்ந்த என்ஜீனியர் ஒருவர் பலியாகி விட்டதாகத் தெரிகிறது.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜீனியராகப் பணியாற்றி வந்தவர் பிரசாத் (27).
கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று தன் நண்பர்கள் இரண்டு பேருடன் மகாபலிபுரம் சென்றார் பிரசாத்.
அங்கு கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பெரிய அலையால் பிரசாத் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டார். அதன் பிறகு அவர் திரும்பி வரவே இல்லை.
அவர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. உடலைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
-->
Comments
Story first published: Friday, December 27, 2002, 5:30 [IST]