அரசு மருத்துவமனையில் அநாதையாக விடப்படும் பெண் சிசுக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பெற்ற குழந்தைகளைத் தாய்மார்கள் அநாதையாகத்தவிக்கவிட்டுச் செல்லும் சம்பவங்கள் தொடர் கதையாகி விட்டன.

கடந்த 14ம் தேதி லட்சுமி என்ற பெண் தனக்குப் பிறந்த குழந்தையை இந்த மருத்துவமனையில் போட்டு விட்டுத்தலைமறைவானார். இரண்டு நாட்கள் கழித்து பாத்திமா, பிரேமா ஆகிய இருவரும் தங்களுக்குப் பிறந்த பெண்குழந்தைகளை விட்டு விட்டுச் சென்றனர்.

இந்தத் தாயார்கள் கொடுத்திருந்த முகவரிகள் அனைத்தும் போலியானவை என்று போலீஸ் விசாரணையின்போதுதெரிய வந்தது.

இந்நிலையில், விஜயா என்ற பெண் சமீபத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு இரட்டைக்குழந்தைகள் பிறந்தன. இரண்டுமே பெண் குழந்தைகள்.

இதில் ஒரு குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது. இன்னொரு குழந்தை 1.5 கிலோ எடையுடன் இருந்தது. அதைஇன்குபேட்டர் கருவிக்குள் வைத்து டாக்டர்கள் பரமாரித்து வந்தனர்.

இந்த நிலையில் விஜயாவும் மருத்துவமனையிலிருந்து தப்பி விட்டார்.

குழந்தைகளை விட்டுவிட்டு தாயார்கள் ஓடிவிடுவதால் மருத்துவமனை நிர்வாகம் குழப்பமடைந்துள்ளது. நான்குகுழந்தைகளையும் என்ன செய்வது என்ற குழப்பத்தில் டாக்டர்கள் உள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+