சேலம் சிறையில் வார்டன்களை தாக்கிய கைதி மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலம் மத்திய சிறையில் நான்கு வார்டன்கள் பயங்கரமாக தாக்கப்பட்ட சம்பவத்தில் ஒரு கைதி மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சேலம் மத்திய சிறையில் சமீபத்தில் இப்ராகிம் ஷா மற்றும் சுதிர் என்ற இரண்டு கைதிகள் பயங்கர கலவரத்தில்ஈடுபட்டனர்.

அப்போது நான்கு வார்டன்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் ஒரு வார்டனின் கை முறிந்தது. மற்றமூன்று வார்டன்களும் பலத்த காயமடைந்தனர்.

இந்நிலையில் இப்ராகிம் ஷா மீது காயமடைந்த 4 வார்டன்களும் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார்செய்தனர். இதையடுத்து இப்ராகிம் ஷா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இப்ராகிம் ஷாவும், சுதிரும் தற்போது தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தனித்தனி அறைகளில்அடைக்கப்படுவதை எதிர்த்துதான் அவர்கள் பயங்கர ரகளையில் இறங்கினர்.

இருவரும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+