For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலிகளுக்கு இலங்கை ராணுவம் திடீர் நிபந்தனை

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க வேண்டுமென்றால், விடுதலைப்புலிகள்ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று இலங்கை ராணுவம் திடீர் நிபந்தனை விதித்துள்ளது. ஆனால் புலிகள்இதைக் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

மேலும் வடக்கு, கிழக்கு இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள தங்கள் முகாம்களை புலிகள் கலைத்துவிட வேண்டும்என்றும் யாழ்ப்பாணத் தீபகற்பப் பகுதி ராணுவ தளபதி சரத் பொன்சேகரா கூறியிருந்தார்.

ஆனால் இதுபோன்ற நிபந்தனைகளை ஒருபோதும் ஏற்க முடியாது என்று கூறி புலிகள் இது தொடர்பான ஒருஅறிக்கையையும் வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கையில்,

தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுக்களை ராணுவம் விரும்பவில்லை என்பது எங்களுக்கு நன்றாகவேதெரியும்.

இந்த அமைதிப் பேச்சைக் குலைக்கும் விதமாகவே ராணுவம் இதுபோன்ற நிபந்தனைகளை விதிக்கிறது.

தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் இடைஞ்சல்களைத்தவிர்ப்பதற்காக ராணுவத்தினர் விதித்திருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றுபேச்சுவார்த்தையின்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆனால் ராணுவம் அதை ஏற்றுக் கொள்ளாமல், உடன்பாட்டிலேயே இல்லாத நிபந்தனைகளைத் தற்போதுவிதித்துள்ளது. இதை ஏற்க முடியாது.

இந்நிலைமை நீடித்தால் மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அவ்வறிக்கையில் புலிகள்எச்சரித்துள்ளனர்.

இந்தப் புதிய விவகாரம் தொடர்பாக இலங்கை அரசு தரப்பில் இதுவரை ஒன்றும் பதிலில்லை.

இதற்கிடையே போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இன்று இலங்கை அரசு தரப்பினரையும், புலிகள்தரப்பினரையும் தனித் தனியாகச் சந்தித்து இதுகுறித்துப் பேசினர்.

பேச்சுவார்த்தை முயற்சிகள் மிகவும் சுமூகமாகப் போய்க் கொண்டிருப்பதால் இலங்கை ராணுவத்தினரும்,புலிகளும் அமைதியாக இருக்க வேண்டும் என்று கண்காணிப்புக் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X