நாகப்பா சாவு: சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு தள்ளுபடி
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா மர்மமான முறையில் இறந்ததுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
வீரப்பன் காட்டில் குண்டுக் காயத்துடன் கடந்த 8ம் தேதி பிணமாக மீட்கப்பட்டார் நாகப்பா. அவரைக் கொன்றதுயார் என்ற மர்ம முடிச்சு இன்னும் அவிழ்க்கப்படாமலே உள்ளது.
இந்நிலையில் வழக்கறிஞர் எஸ்.டி. ராஜதேவன் என்பவர் இம்மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனுவில்,
தமிழக அதிரடிப்படையினர் வீரப்பனுடன் நடத்திய துப்பாக்கிச் சண்டையின்போதுதான் நாகப்பா குண்டடி பட்டுஉயிரிழந்தார் என்று வீரப்பன் கூறியுள்ளான். ஆனால் இதை தமிழக அரசு மறுத்துள்ளது.
நாகப்பாவின் உடல் கிடந்த இடத்தின் அருகே அவருடைய டைரி கண்டெடுக்கப்பட்டது. அதில் பல்வேறுதகவல்கள் உள்ளன.
அவருடைய உடலை காட்டு விலங்குகள் கடித்துக் காயப்படுத்தியதற்கான அடையாளங்கள் இருப்பதாகக்கூறப்படுகிறது.
ஆனாலும் பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னரும் கூட இன்னும் நாகப்பாவின் மரணம் குறித்த உண்மைஇன்னும் வெளியாகவில்லை.
எனவே இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டு, ஒரு மாதத்திற்குள் அது அறிக்கை ஒன்றையும் தாக்கல்செய்ய உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் கூறியிருந்தார் ராஜதேவன்.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன்ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அம்மனுவைத் தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் கூறுகையில்,
அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே நீதிமன்றம் இவ்விஷயத்தில் தலையிட முடியும்.
அதாவது, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க அரசு தவறிவிட்டது என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல்நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடும்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை அதுபோன்ற அசாதாரண சூழ்நிலை எதுவும் நடக்காததால் இவ்விஷயத்தில்நீதிமன்றம் தலையிடுவதற்கான அவசியமே ஏற்படவில்லை.
எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் கூறினர்.
-->
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications