"வாஸ்து"வை உரிமையாக்கியஜெர்மனி நிறுவனம்
டெல்லி:
இந்தியர்கள் வீடு கட்டுவதற்கு நம்பிக்கையுடன் பயன்படுத்தும் "வாஸ்து" என்ற பெயரை ஜெர்மனி நிறுவனம் ஒன்றுதன்னுடைய டிரேட்மார்க்காகப் பதிவு செய்துள்ளது.
ஏராளமான மக்கள் ஏற்கனவே கட்டிய கட்டடங்களை "வாஸ்து"க்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்துஇடித்தும், மாற்றி அமைப்பதும் கூட உண்டு. அந்த அளவுக்கு "வாஸ்து" நம்பிக்கை அனைவரிடமும் புரையோடிப்போயுள்ளது.
இவ்வாறு இந்தியாவின் பாரம்பரியத்தில் மூழ்கிப் போன "வாஸ்து" என்ற பெயரை ஜெர்மனியைச் சேர்ந்த சம்ஹிதாஎன்ற நிறுவனம்தான் தன்னுடைய அகாடமிக்கு "வாஸ்து அகாடமி" என்ற பெயரைப் பதிவு செய்தது.
அதுவும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அந்தக் கம்பெனி இந்தப் பெயரைப் பதிவு செய்து விட்டதாகத்தெரிகிறது.
ஜெர்மனியைச் சேர்ந்த வாஸ்து நிபுணரான மார்க்கஸ் ஸ்மியேக் என்பவர்தான் இந்திய வாஸ்து சாஸ்திரநிறுவனத்தின் இயக்குநரான அஸ்வினி பன்சாலிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.
ஆனாலும் அந்த அகாடமி பின்னர் தன் பெயரை "வாஸாதி அகாடமி" என்று மாற்றிக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
உலக வர்த்தக சபை விதிமுறைகளின் படி "வாஸ்து" என்ற பெயரை மற்ற எந்த நிறுவனமும் தன் வியாபாரநோக்கத்துக்காகப் பயன்படுத்த முடியாது.
ஆனால் இதையும் மீறி அந்த ஜெர்மனி நிறுவனம் எப்படி "வாஸ்து" பெயரைப் பதிவு செய்தது என்பது குறித்துசட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக பன்சால் நிருபர்களிடம் கூறினார்.
இந்தியாவிற்கே சொந்தமான பாஸ்மதி அரிசி, வேம்பு, மஞ்சள் போன்ற பொருட்களை அமெரிக்கா உள்ளிட்டநாடுகள் ஏற்கனவே "பேடன்ட்" (காப்புரிமை) செய்து விட்ட நிலையில் "வாஸ்து" என்ற பெயரும் பறிபோய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ரிக் வேத காலத்திலேயே "வாஸ்து" என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பன்சால் நிருபர்களிடம் தெரிவித்தார்.
-->