தலித்களை கோவிலுக்குள் விடும் விவகாரம்: சங்கராச்சாரியார் மீது புதிய தமிழகம் வழக்கு
சென்னை:
காஞ்சி சங்கராச்சாரியார் மீது புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தலித்களை சங்கராச்சாரியார் தரக் குறையாவகப் பேசியதாகவும் அதற்காக அவர் மன்னிப்பு கோராவிட்டால் வழக்குத்தொடரப்படும் என்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரித்திருந்தார்.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து சங்கராச்சாரியார் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்புதிய தமிழகம் கட்சியின் பொதுச் செயலாளர் துரைசாமி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். தனது மனுவில் அவர்கூறியிருப்பதாவது:
தலித் என்ற பெயரில் கோவிலுக்குள் வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்றும் ஆதிதிராவிடர் அல்லது தாழ்த்தப்பட்டவர்கள்என்ற பெயரில் வந்தால் தான் அனுமதிப்போம் என்றும் கூறியுள்ளார்.
கோவிலுக்குள் நுழைவதை அனுமதிக்கவும் மறுக்கவும் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அப்படி இருக்கும்போது தலித்என்று வராதே, ஆதி திராவிடன் என்ற அடைமொழியுடன் வா, அப்போது தான் கோவிலுக்குள் விடுவேன் என்று இவர்பேசியிருப்பது இந்திய அரசியல் சாசனத்துக்கே எதிரானது.
இந்திய அரசியல் சாசனத்தை அவமதித்த சங்கராச்சாரியார் மீது நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி ரவீந்திரதாஸ் வரும் ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
-->