சந்திரபாபு நாயுடு உதவியுடன் பா.ஜ.க. கூட்டணிக்கு ஜெ. முயற்சி: இளங்கோவன்
சென்னை:
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மூலமாக பா.ஜ.க. கூட்டணியில் இடம் பிடிக்க அதிமுக முயல்வதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
மாநில காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில்,
மதசார்பற்ற கட்சிகளுடன் மட்டுமே காங்கிரஸ் கூட்டணி வைக்கும். பா.ஜ.க. கூட்டணியில் நீடிக்கும் வரை திமுகவுடன் காங்கிரஸ்எந்த உறவும் வைத்துக் கொள்ளாது. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இருக்கும் வரை திமுகவை மதசார்பற்ற கட்சியாகக்கருத முடியாது.
காவிரிப் பிரச்சனைக்குத் தீர்வு காண கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுடன் நல்லுறவைப் பேண முதல்வர் ஜெயலலிதா முயலவேண்டும். நல்லுறவு மட்டுமே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க உதவும். அதை விட்டுவிட்டு கர்நாடக முதல்வரை குறை கூறிக்கொண்டிருப்பதால் மட்டும் பிரச்சனை தீர்ந்துவிடும்.
பா.ஜ.கவை எப்படி எல்லாம் நெருங்க முடியுமோ அப்படியெல்லாம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் ஜெயலலிதா. முதலில்ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள், ஆர்.எஸ்.எஸ். ஆகிய மத வெறி அமைப்புகளை மனம் குளிரச் செய்ய மதமாற்றத் தடைச் சட்டம்கொண்டு வந்தார். இப்போது வேறு வழிகளில் பா.ஜ.கவின் மனம் கவரும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாகத் தான் இப்போது ஹைதராபாத் சென்று தெலுங்கு தேசம் தலைவரும் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவிடம்கெஞ்சி வருகிறார். அவர் மூலமாக எப்படியாவது பா.ஜ.க. கூட்டணிக்குள் நுழைந்துவிட முயல்கிறார் என்றார் இளங்கோவன்.
-->












Click it and Unblock the Notifications