நாகப்பா மரணம்: 15 நாட்களில் விசாரணைக் கமிஷன் அறிக்கை சமர்பிக்கும்
சென்னை:
நாகப்பாவின் மர்மச் சாவு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் 15 நாட்களில் தனது அறிக்கையை சமர்பிக்கஉள்ளது.
இத் தகவலை கர்நாடக செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் காகோடு திம்மப்பா சென்னையில் தெரிவித்தார். உடல் நலம்பாதிக்கப்பட்டு அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் பழம்பெரும் நடிகை பண்டரிபாயைச் சந்திக்க அவர் சென்னை வந்தார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த பண்டரிபாய்க்கு தேவையான மருத்துவ உதவிகளை முதல்வர் ஜெயலலிதா செய்து வருவதுகுறிப்பிடத்தக்கது. இந் நிலையில் பண்டரிபாய்க்கு கர்நாடக அரசும் உதவ வேண்டும் என கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து அவரைப் பார்க்க அமைச்சர் திம்மப்பாவை கர்நாடக அரசு அனுப்பி வைத்துள்ளது. அவரும் கர்நாடக திரைப்படவளர்ச்சி வாரியத்தின் நிர்வாக இயக்குனர் விசுகுமாரும் அப்பல்லோ மருத்துவமனையில் பண்டரிபாயைச் சந்தித்து உடல் நலம்விசாரித்தனர்.
73 வயதான பண்டரிபாய் சர்க்கரை நோயாலும், சிறுநீரக நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மருத்துவ செலவைஅண்ணா அறக்கட்டளை ஏற்கும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பண்டரிபாயை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் பேசிய திம்மப்பா,
வீரப்பனைப் பிடிக்க எல்லா முயற்சிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. மத்திய அரசும் ஒத்துழைப்பு தந்து வருகிறது.நாகப்பாவின் மரணத்தில் பின்னணி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷன் 15 நாட்களுக்குள் தனது அறிக்கையைஒப்படைத்துவிடும் என்றார்.
-->