வீரப்பனை எங்களால் பிடிக்க முடியும்: சி.ஆர்.பி.எப். சவால்
டெல்லி:
காட்டுப் பகுதியில் கொள்ளையர்களைப் பிடிப்பதில் தேர்ச்சியும் அனுபவமும் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையினால்வீரப்பனைப் பிடிக்க முடியும் என அந்தப் படையின் டைரக்டர் ஜெனரல் திரநாத் மிஸ்ரா கூறியுள்ளார்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர்,
வீரப்பனைப் பிடிக்கும் பணி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டால் அதைச் செய்து காட்டுவோம். அதற்கான திறமையும்ஆயுதங்களும் எனது படையினரிடம் உண்டு.
முதலில் எங்களை காட்டுக்குள் போய் வீரப்பனைப் பிடிக்கச் சொன்னார்கள். ஆனால், தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர்எங்களை காட்டுக்கு வெளியில் தேடுதல் வேட்டை நடத்தச் சொன்னார்கள். அங்கு தேடுவது வெட்டிச் செயல் என்பதால்படையினரை திரும்ப அழைத்துவிட்டோம்.
எங்களிடம் அந்தப் பணியை முழுமையாக ஒப்படைத்தால் வீரப்பனை பிடித்துக் காட்டுவோம். நாட்டின் எத்தனையோ காடுகளில்பதுங்கிய தீவிரவாதிகள், கொள்ளையர்களை விரட்டி விரட்டி பிடித்துள்ளது மத்திய ரிசர்வ் போலீஸ் படை.
அதே நேரம் தமிழக, கர்நாடக அதிரடிப் படைகளின் திறமையையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. 150 பேர் கொண்டகும்பலுடன் திரிந்து வந்த வீரப்பனுடன் இன்று வெறும் 6 பேர் மட்டுமே உள்ளனர். இதற்குக் காரணம் அவனது கும்பலைச்சேர்ந்தவர்களை இரு மாநில அதிரடிப்படையினரும் விரட்டி விரட்டி கொன்றது தான். இந்த 5 பேரையும் கூட ஒழித்துக் கட்ட இருமாநிலப் படைகளால் முடியும்.
ஜம்மூ-காஷ்மீரில் ரகுநாத் கோவிலின் மீது முதலில் தாக்குதல் நடந்தவுடனேயே நாங்கள் சில யோசனைகளைச் சொன்னோம்.கோவிலுக்குள் நுழையும் பாதையை ஒருவழிப் பாதையாக்கச் சொன்னோம். அதை நிர்வாகம் காதில் வாங்கவே இல்லை.அனைத்து பாதுகாப்பு யோசனைகளையும் குப்பையில் போட்டார்கள். இதனால் தான் இரண்டாவது முறையாக கோவிலில்தாக்குதல் நடந்தது.
அதே போல காஷ்மீரில் மனித வெடிகுண்டுகளை வைத்து நடத்தப்படும் தாக்குதல்களை சமாளிக்க வேண்டிய புதிய அவசியம்பாதுகாப்புப் படையினருக்கு ஏற்பட்டுள்ளது. இது போன்ற தற்கொலைப் படைத் தீவிரவாதத்தை ஒழிப்பது ரொம்ப சிரமம். தான்சாகத் தயாராகிவிட்ட ஒருவன் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்றார் மிஸ்ரா.
இப்போது ஒரு மத்திய ரிசர்வ் போலீஸ படைப் பிரிவு வீரப்பனைப் பிடிக்கும் பணியில் இரு மாநில அதிரடிப் படைகளுக்கு உதவஅனுப்பப்பட்டுள்ளது. ஆனால், மாநில படைகளுக்குக் கீழ் செயல்பட சி.ஆர்.பி.எப். தயாராக இல்லை என்று தெரிகிறது. இதனால்அவர்கள் முழு அளவில் தேடுதல் வேட்டையில் இறங்கவில்லை.
-->
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications