வீரப்பனை எங்களால் பிடிக்க முடியும்: சி.ஆர்.பி.எப். சவால்
டெல்லி:
காட்டுப் பகுதியில் கொள்ளையர்களைப் பிடிப்பதில் தேர்ச்சியும் அனுபவமும் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையினால்வீரப்பனைப் பிடிக்க முடியும் என அந்தப் படையின் டைரக்டர் ஜெனரல் திரநாத் மிஸ்ரா கூறியுள்ளார்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர்,
வீரப்பனைப் பிடிக்கும் பணி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டால் அதைச் செய்து காட்டுவோம். அதற்கான திறமையும்ஆயுதங்களும் எனது படையினரிடம் உண்டு.
முதலில் எங்களை காட்டுக்குள் போய் வீரப்பனைப் பிடிக்கச் சொன்னார்கள். ஆனால், தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர்எங்களை காட்டுக்கு வெளியில் தேடுதல் வேட்டை நடத்தச் சொன்னார்கள். அங்கு தேடுவது வெட்டிச் செயல் என்பதால்படையினரை திரும்ப அழைத்துவிட்டோம்.
எங்களிடம் அந்தப் பணியை முழுமையாக ஒப்படைத்தால் வீரப்பனை பிடித்துக் காட்டுவோம். நாட்டின் எத்தனையோ காடுகளில்பதுங்கிய தீவிரவாதிகள், கொள்ளையர்களை விரட்டி விரட்டி பிடித்துள்ளது மத்திய ரிசர்வ் போலீஸ் படை.
அதே நேரம் தமிழக, கர்நாடக அதிரடிப் படைகளின் திறமையையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. 150 பேர் கொண்டகும்பலுடன் திரிந்து வந்த வீரப்பனுடன் இன்று வெறும் 6 பேர் மட்டுமே உள்ளனர். இதற்குக் காரணம் அவனது கும்பலைச்சேர்ந்தவர்களை இரு மாநில அதிரடிப்படையினரும் விரட்டி விரட்டி கொன்றது தான். இந்த 5 பேரையும் கூட ஒழித்துக் கட்ட இருமாநிலப் படைகளால் முடியும்.
ஜம்மூ-காஷ்மீரில் ரகுநாத் கோவிலின் மீது முதலில் தாக்குதல் நடந்தவுடனேயே நாங்கள் சில யோசனைகளைச் சொன்னோம்.கோவிலுக்குள் நுழையும் பாதையை ஒருவழிப் பாதையாக்கச் சொன்னோம். அதை நிர்வாகம் காதில் வாங்கவே இல்லை.அனைத்து பாதுகாப்பு யோசனைகளையும் குப்பையில் போட்டார்கள். இதனால் தான் இரண்டாவது முறையாக கோவிலில்தாக்குதல் நடந்தது.
அதே போல காஷ்மீரில் மனித வெடிகுண்டுகளை வைத்து நடத்தப்படும் தாக்குதல்களை சமாளிக்க வேண்டிய புதிய அவசியம்பாதுகாப்புப் படையினருக்கு ஏற்பட்டுள்ளது. இது போன்ற தற்கொலைப் படைத் தீவிரவாதத்தை ஒழிப்பது ரொம்ப சிரமம். தான்சாகத் தயாராகிவிட்ட ஒருவன் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்றார் மிஸ்ரா.
இப்போது ஒரு மத்திய ரிசர்வ் போலீஸ படைப் பிரிவு வீரப்பனைப் பிடிக்கும் பணியில் இரு மாநில அதிரடிப் படைகளுக்கு உதவஅனுப்பப்பட்டுள்ளது. ஆனால், மாநில படைகளுக்குக் கீழ் செயல்பட சி.ஆர்.பி.எப். தயாராக இல்லை என்று தெரிகிறது. இதனால்அவர்கள் முழு அளவில் தேடுதல் வேட்டையில் இறங்கவில்லை.
-->
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications