பவானியில் அணை: கேரள அரசை கண்டித்து மேட்டுப் பாளையத்தில் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

மேட்டுப்பாளையம்:

பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியைக் கேரள அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்திமேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாக கேரளா வழியாக ஓடி மீண்டும் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில்தான்பவானி ஆறு பாய்கிறது.

கேரளாவில் இந்த ஆறு ஓடும் இடத்தின் குறுக்கே ஒரு அணையைக் கட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கேரள அரசின் இந்த முடிவுக்கு தமிழக அரசு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநிலமுதல்வர் அந்தோணிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியைக் கேரள அரசு கைவிட வேண்டும் என்றுவலியுறுத்தி மேட்டுப்பாளைம் பஸ் நிலையத்தின் முன் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

அணை கட்டும் முயற்சியைக் கேரள அரசு நிறுத்திக் கொள்ளும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றுஅதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே மதுரையில் இன்று நிருபர்களிடம் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இவ்விவகாரம் தொடர்பாகதமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பல்வேறு கேரள நதிகள் மூலம் சுமார் 4,000 டி.எம்.சி. நீர் வீணாகக் கடலுக்குள் சென்று கலக்கிறது என்றும்தெரிவித்த ராமதாஸ், அவற்றிலிருந்து 400 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்குத் திருப்பி விட்டால், சுமார் 25 லட்சம்ஏக்கர் நிலத்தில் தமிழக விவசாயிகர்ள கூடுதலாக விளைச்சல் காண முடியும் என்றும் கூறினார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+