For Daily Alerts
Just In
"இந்துக்கள் மனதை புண்படுத்த வேண்டாம்"": கருணாநிதிக்கு திருநாவுக்கரசர் வேண்டுகோள்
சென்னை:
இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் பேசுவதை திமுக தலைவர் கருணாநிதி நிறுத்திக் கொள்ள வேண்டும்என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திருநாவுக்கரசர் கூறினார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
கருணாநிதி ஒரு மூத்த அரசியல் தலைவர். மக்கள் மத்தியில் எப்படிப் பேச வேண்டும் என்பது பற்றி அவருக்குயாரும் அறிவுரை கூற வேண்டிய அவசியமில்லை.
இந்துக்களின் மனம் புண்படும் வகையில் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். இவ்வாறு பேசுவதை அவர்உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சமீபத்தில் நடந்த குஜராத் தேர்தலின்போது பா.ஜ.க. யாரையும் புண்படுத்திப் பேசவில்லை.
தேர்தல் கூட்டணி குறித்து பா.ஜ.க. தலைமைதான் முடிவெடுக்கும் என்றார் திருநாவுக்கரசர்.
-->
Comments
Story first published: Sunday, December 29, 2002, 5:30 [IST]