கடத்தப்பட்ட "ஹிந்துஸ்தான் டைம்ஸ்" நிருபர் விடுதலை

Subscribe to Oneindia Tamil

பாட்னா:

பீகாரில் சமீபத்தில் கடத்தப்பட்ட "ஹிந்துஸ்தான் டைம்ஸ்" பத்திரிக்கையின் புகைப்பட நிருபர் அசோக் கார்னைக்கடத்தல்காரர்கள் விடுவித்து விட்டனர்.

நாலந்தா நகரின் அருகே பேலா என்ற கிராமத்தில் பணி நிமித்தமாக புகைப்படங்கள் எடுப்பதற்காகச்சென்றிருந்தார் அசோக். அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தன் மனைவியுடன் அவர் தங்கியிருந்தார்.

இந்நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன் நள்ளிரவில் அசோக்கின் வீட்டுக்குள் புகுந்த சிலர் அவரை மட்டும் கடத்திச்சென்று விட்டனர்.

தாங்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்தால்தான் அவரை விடுவிப்போம் என்று அவருடைய மனைவியிடம்கூறிவிட்டு அசோக்கை இழுத்துச் சென்றனர். ஆனால் அதற்குப் பின்னர் கடத்தல்காரர்களிடமிருந்து எந்தவிதமானதகவலும் இல்லை.

அசோக்கை கண்டுபிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.

இதற்கிடையே அசோக்கை மீட்க வேண்டும் என்று கோரி பத்திரிக்கை நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள்பீகார் முதல்வர் ராப்ரிதேவியின் வீட்டை நோக்கி பேரணிப் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் நேற்று மாலை கடத்தல்காரர்களிடமிருந்து அசோக் விடுவிக்கப்பட்டார். எந்தவிதமான நிபந்தனையும்இல்லாமல் அவரைக் கடத்தல்காரர்கள் விடுவித்தனர்.

ஒரு ஆற்றின் கரையோரத்தில் அசோக்கை விடுவித்த கடத்தல்காரர்கள், அருகிலிருந்த கரும்புக் காட்டுக்குள் ஓடிமறைந்தனர். தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று தெரியாமலேயே தட்டுத் தடுமாறி அருகிலுள்ள ஒருகிராமத்திற்கு வந்து சேர்ந்த அசோக், பின்னர் அங்கிருந்து வீடு திரும்பினார்.

அரசு கொடுத்த கடும் நெருக்கடியைத் தொடர்ந்தே கடத்தல்காரர்கள் தன்னை விடுவித்ததாக அசோக் பின்னர்நிருபர்களிடம் கூறினார். ராப்ரிதேவி மற்றும் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரையும் அசோக்சந்தித்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+