வைகோ கைதை எதிர்த்து ஸ்டாலின் கையெழுத்து
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைக் கண்டித்து அக்கட்சிநடத்தி வரும் கையெழுத்து இயக்கம் படிவத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரான ஸ்டாலின் கையெழுத்துபோட்டார்.
வைகோவைக் கைது செய்த தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கோடிகையெழுத்து வாங்கும் இயக்கத்தை மதிமுக தொடங்கியது.
திமுக தலைவர் கருணாநிதிதான் முதல் கையெழுத்தைப் போட்டு இந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் கையெழுத்து வாங்கும் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.
ஓரிரு நாட்களுக்கு முன் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரான இளங்கோவனும் கையெழுத்துப்போட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்ற விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய வைகோ கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து இளங்கோவன் கையெழுத்து போட்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியும் இதைக் கடுமையாகவிமர்சித்திருந்தார்.
ஆனால் வைகோ கைது செய்யப்பட்ட சம்பவத்தை ஆரம்பத்திலிருந்தே கண்டித்து வருவதாக இளங்கோவன்விளக்கமளித்தார்.
இந்நிலையில் இந்தக் கையெழுத்து இயக்கத்திற்கான படிவத்தில் ஸ்டாலினும் நேற்று கையெழுத்து போட்டார்.
மதிமுகவின் அவைத் தலைவரான எல். கணேசன் நேற்று சென்னை-வேளச்சேரியில் உள்ள ஸ்டாலினின் வீட்டுக்குச்சென்று, படிவத்தில் கையெழுத்துப் போடுமாறு கேட்டுக் கொண்டார்.
ஸ்டாலினும் உடனடியாக அந்தப் படிவத்தில் கையெழுத்திட்டு, அந்த இயக்கம் வெற்றி பெற வேண்டும் என்றுவாழ்த்தினார்.
-->












Click it and Unblock the Notifications