கோவாவில் புத்தாண்டு கொண்டாடுகிறார் வாஜ்பாய்
பனாஜி:
புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடுவதற்காக இன்று கோவா வந்து சேர்ந்தார் பிரதமர் வாஜ்பாய். பிரதமரின்வருகையைத் தொடர்ந்து கோவாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நான்கு நாள் விடுமுறையாக சிறப்பு விமானப்படை விமானத்தில் பனாஜி வந்து சேர்ந்த வாஜ்பாய் மற்றும்அவருடைய குடும்பத்தினரை கோவா ஆளுநர் கிதார் நாத் சஹானியும், அம்மாநில முதல்வர் மனோகர் பரிக்காரும்வரவேற்றனர்.
பின்னர் வாஜ்பாய் தனி ஹெலிகாப்டர் மூலம் வாஜ்பாய் குடும்பத்தினர் பெனாலிம் என்னும் இடத்தில் உள்ள தாஜ்எக்ஸோட்டிகா பீச் ஓய்வு விடுதிக்கு விரைந்தனர். வரும் 2003 புத்தாண்டை இங்கு தங்கியிருந்துதான் வாஜ்பாய்கொண்டாடவுள்ளார்.
வாஜ்பாயின் வருகையைத் தொடர்ந்து கோவா மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள்தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கத்தைக் காட்டிலும் 800 பாதுகாப்புப் படையினர் கூடுதலாகக்குவிக்கப்பட்டுள்ளனர்.
வாஜ்பாய் தங்கியுள்ள ஓட்டலுக்கும் வரலாறு காணாத பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கடற்படை மற்றும் கடலோரக் காவற்படை போலீசாரும் முழு உஷார் நிலையில் இருக்குமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புத்தாண்டையொட்டி சர்வதேச தீவிரவாதிகள் கோவாவில் பலத்த தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல்ஒரு சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கலாம்.
-->