For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராணுவ தளபதி பத்மநாபன் நாளை ஓய்வு பெறுகிறார்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இந்திய ராணுவத்தின் தளபதி பதவியிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் செளந்தரராஜன் பத்மநாபன் நாளைஓய்வு பெறுகிறார்.

முன்னதாக முப்படைகளின் கூட்டுத் தலைவர் பொறுப்பிலிருந்து இன்று ஓய்வு பெற்ற பத்மநாபன், அப்பொறுப்பைகடற்படைத் தளபதி மத்வேந்திர சிங்கிடம் ஒப்படைத்தார்.

சீனியாரிட்டி அடிப்படையில் இந்தப் பொறுப்பை முப்படைகளின் தளபதிகளும் மாறி மாறி வகித்து வருவார்கள்.அதன்படி நாளை ராணுவ தளபதி பதவியிலிருந்து பத்மனாபன் ஓய்வு பெறுவதையொட்டி, இப்பொறுப்பைமத்வேந்திர சிங் இன்று ஏற்றுக் கொண்டார்.

மத்வேந்திர சிங்கை விட விமானப் படைத் தளபதியான கிருஷ்ணசாமிதான் சீனியர் என்ற போதிலும், அவருக்குமுன்பாகவே கடற்படைத் தளபதியாக மத்வேந்திர சிங் பொறுப்பேற்று விட்டதால் அவருக்கே முப்படைத்தளபதிகளின் தலைவர் பொறுப்பு சென்று விட்டது.

இதற்கிடையே மத்வேந்திர சிங்கிடம் பொறுப்புக்களை ஒப்படைத்த பின்னர் பத்மனாபன் நிருபர்களிடம்பேசுகையில்,

இந்த ஆண்டுத் துவக்கத்தில் பாகிஸ்தானுடன் எப்படியும் போர் தொடங்கிவிடும் என்றுதான் எதிர்பார்த்தோம்.இந்திய ராணுவமும் அதற்குத் தயாராகவே இருந்தது.

எந்த நேரத்திலும் பாகிஸ்தானைத் தாக்க தயாராக இருந்தோம். ஆதே நேரத்தில் மத்திய அரசின் முடிவுக்காகவும்நாங்கள் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இப்போதும் கூட காஷ்மீரில் இந்தியப் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில்தான் உள்ளனர்.

ஆனால் எங்களுடன் நேரடியாக மோதுவதற்கு அஞ்சும் பாகிஸ்தான் தீவிரவாதிகளோ அப்பாவிப்பொதுமக்களையும், பெண்களையும், குழந்தைகளையும் குறிவைத்து தாக்கி வருகின்றனர் என்றார் பத்மனாபன்.

பத்மனாபன் நாளை ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் அடுத்த தளபதியாக ஜெனரல் நிர்மல்சந்த் விஜ் நாளை பொறுப்பேற்றுக் கொள்வார்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X