ஜெயலலிதாவை விமர்சித்த அரசு பஸ் கண்டக்டருக்கு அடி-உதை: டிரைவர் கைது
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசிய அரசுப் போக்குவரத்துக் கழக கண்டக்டரை தாக்கியதுதொடர்பாக சக டிரைவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கே.கே. நகர் டிப்போவில் டிரைவராக இருப்பவர் புருஷோத்தமன். கண்டக்டராக இருப்பவர்சோமசுந்தரம்.
சமீபத்தில் இருவரும் டிப்போவில் நின்றபடி பல்வேறு அரசியல் விவகாரங்களைப் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது தமிழக அரசு குறித்தும், முதல்வர் குறித்தும் சோமசுந்தரம் ஏதோ கூறினார்.
இதனால் புருஷோத்தமன் ஆத்திரமடைந்தார். எப்படி முதல்வரை விமர்சிக்கலாம் என்று கூறிக் கொண்டே அவர்சோமசுந்தரத்தை சராமாரியாக அடிக்கத் தொடங்கினார்.
இந்தத் திடீர்த் தாக்குதலால் சோமசுந்தரம் நிலைகுலைந்து போனார். இதைப்பார்த்த அருகில் இருந்த பிறடிரைவர்கள், கண்டக்டர்கள் இருவரையும் விலக்கி விட முயற்சித்தனர்.
அப்போது அவர்களுக்கும் அடி விழுந்தது. இதில் ராமச்சந்திரன் என்ற கண்டக்டருக்கு லேசான ரத்தக் காயம்ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் புருஷோத்தமனையும், சோமசுந்தரத்தையும் அனைவரும் சேர்ந்து அமைதிப்படுத்தினர்.
இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் விரைந்து வந்துபுருஷோத்தமனை கைது செய்தனர்.
-->