For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிண்டி தேசியப் பூங்காவில் 2,989 மான்கள்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை-கிண்டி தேசியப் பூங்காவில் 2,989 மான்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இவற்றில்2,595 மான்கள் "புள்ளி மான்" இனத்தைச் சேர்ந்தவை.

பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து தமிழக அரசின் வனத்துறை இந்தக் கணக்கெடுப்பை நடத்தியது.

மொத்தம் 40 பேர் கொண்ட குழு இந்த கணக்கெடுப்பை நடத்தியது. கல்லூரி மாணவர்களும், விலங்கியல்ஆர்வலர்களும் கூட இதில் ஈடுபட்டனர்.

கிண்டி தேசியப் பூங்கா, ஆளுநர் மாளிகை அமைந்துள்ள "ராஜ் பவன்" ஆகிய பகுதிகளில் மான்கள் கணக்கெடுப்புநடந்தது. மொத்தம் 2,989 மான்கள் இருந்தன. இவற்றில் 2,595 புள்ளி மான்கள். மற்றவை பிற இனத்தைச்சேர்ந்தவை.

2,595 புள்ளி மான்களில் 1,560 பெண் மான்கள், 292 ஆண் மான்கள் மற்றும் 743 குட்டிகள் அடங்கும். "பிளாக் பக்"வகையைச் சேர்ந்த மான்களில் 160 ஆண், 183 பெண் மான்கள் மற்றும் 51 குட்டிகள் உள்ளன.

கிண்டி பூங்காவில் உள்ள மான்கள் பல நேரங்களில் வெளியில் வந்து விடுவதால் அவற்றின் பாதுகாப்பு கருதிதேசியப் பூங்கா, ராஜ்பவன், ஐ.ஐ.டி வளாகம் ஆகியவற்றைச் சுற்றிலும் வேலி அமைக்க யோசனைகூறப்பட்டுள்ளது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X