அதிமுக கூட்டணியிலிருந்து முஸ்லீம் லீக் வெளியேறியது
சென்னை:
அதிமுக கூட்டணியில் இருந்து வந்த இந்திய தேசிய லீக் கட்சி அக்கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டது.
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டுபோட்டியிட்டது இந்திய தேசிய லீக்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த வாணியம்பாடி இடைத் தேர்தலுக்கான சீட்டை தங்களுக்கே கொடுக்கவேண்டும் என்று அதிமுகவிடம் இந்திய தேசிய லீக் கோரியது
ஆனால் இந்தக் கோரிக்கையை அதிமுக காதில் போட்டுக் கொள்ளவில்லை. வாணியம்பாடி இடைத் தேர்தலில்அதிமுகவே போட்டியிட்டு வெற்றி பெற்றது.
அந்தச் சமயத்திலிருந்தே அதிமுகவுடனான உறவை இந்திய தேசிய லீக் சிறிது சிறிதாக நிறுத்திக் கொண்டது.
இதற்கிடையே கோவில் அன்னதானத் திட்டம், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்திபா.ஜ.கவைக் கவர ஆரம்பித்தது அதிமுக. இவையும் இந்திய தேசிய லீக் கட்சிக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட்டணியில் நிச்சயம் மாறுதல் இருக்கும் என்று பா.ஜ.கவின் தேசியப்பொதுச் செயலாளர் இல. கணேசனும் நிருபர்களை அழைத்து தெளிவாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் குஜராத் முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடியின் பதவியேற்புவிழாவில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா பங்கேற்றதும் இந்திய தேசிய லீக்கட்சியைப் பெரிதும் உசுப்பேற்றி விட்டது.
இதைத் தொடர்ந்து இனி அதிமுகவுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று கூட்டணியைத் துண்டித்துக் கொண்டதுஇந்திய தேசிய லீக்.
மேலும் சிறுபான்மை சமூகத்தினருக்காகக் குரல் எழுப்பும் காங்கிரஸ் கட்சிக்கே இனி ஆதரவளிப்போம் என்றும்சமீபத்தில் நடந்த இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாத்தான்குளத்தில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் காங்கிரசை ஆதரிக்கப் போவதாகவும் அக்கட்சியின்தலைவர் அப்துல் காதர் கூறினார்.
-->