For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டாலின் மீது விரைவில் வழக்கு?-

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப் போடுவது தொடர்பாக ஹைதராபாத்தில் ஓய்வு எடுத்துவரும் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர்கலைவாணன் கூறியுள்ளார்.

ஜெயலலிதா ஹைதராபாத் சென்று ஓய்வு எடுத்து வருகிறார். அவருடன் தோழி சசிகலாவும் சென்றுள்ளார்.இந்நிலையில் கலைவாணன் திடீரென்று ஹைதராபாத் சென்றார்.

ஸ்டாலின் மீது புதிய வழக்குத் தொடுப்பது தொடர்பாகவே முதல்வருடன் ஆலோசனை நடத்த கலைவாணன்ஹைதராபாத் சென்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

அதை கலைவாணன் தற்போது மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மாநகராட்சி நிர்வாகப் பணி சீர்திருத்தம் மற்றும் பசுமையாக்கல் திட்டம் தொடர்பாக ஹைதராபாத் மாநகராட்சிஅதிகாரிகளுடன் விவாதிப்பதற்காகவே சில அதிகாரிகளுடன் அங்கு சென்றிருந்தேன்.

ஸ்டாலின் மீது கேஸ் போடுவது தொடர்பாக விவாதிக்க முதல்வரை சந்திக்க நான் சென்றிருந்ததாகவெளியாகியுள்ள செய்திகள் உண்மையானவை அல்ல, சரியான செய்தியும் அல்ல என்று கூறியுள்ளார்கலைவாணன்.

இருப்பினும், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மாநகராட்சி மன்ற சாதாரணக் கூட்டத்தில் துணை மேயர் கராத்தேதியாகராஜன் பேசுகையில், ஸ்டாலின் மீது மாநகராட்சிக் பள்ளிக் கட்டடங்கள் கட்டியதில் நடந்துள்ளமுறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அதுதொடர்பான ஆய்வு நடந்து வருவதாக கூறியதுகுறிப்பிடத்தக்கது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X